Tuesday, March 21, 2006

பட்டாசுன்னா வெடிச்சே ஆகணுமா என்ன?!


தீபாவளின்னா எல்லோருக்கும் ஞாபகம் வர்றது பட்டாசு தாங்க. புது ட்ரஸ் ரெண்டாவது தான்.

அதுவும் சின்ன வயசில தீபாவளின்னா ஒரே கொண்டாட்டம் தான் போங்க. ஒரு மாசம் முன்னாடியிருந்தே கொஞ்ச கொஞ்சமா காசு ( கடைக்கு அனுப்பினா கூலி இல்லாம போக மாட்டோம்) சேர்த்து தினமும் எண்ணிப் பார்த்து யாருக்கும் தெரியாம ஒளிச்சு வைக்கறது வழக்கம். பட்ஜெட் எல்லாம் கூட போடுவோம் ( என்ன பெரிசா ஒரு ஐம்பது ரூபா தான் வரும்.ஆனா டெய்லி எண்ணுவோம்) ஒரு வாரம் இருக்கும் போது பட்டாசு கடை பக்கமாய் சைடுல போய் நின்னு என்னென்ன பட்டாசு வாங்கலாம்னு மனசுக்குள்ள கணக்கு வேற. பிரண்ட்ஸ் கூட எல்லாம் டிஸ்கசன் செஞ்சு யார் யார் எவ்வளோ காசுக்கு பட்டாசு வாங்கறதுன்னு போட்டி.

தீபாவளிக்கு ரெண்டு நாள் முன்னயே பட்டாசு வாங்கி வெயில்ல காய வைப்போம். (மழை வராம இருந்தா) கரெக்டா தீபாவளி நாள் மட்டும் எல்லாருக்கும் முன்னாடியே எழுந்து ( தூங்கினா தானே எந்திரிக்க) பர பரன்னு ஊதுவத்தியை தேடி, தீப்பெட்டி எடுத்து பத்த வச்சு மொத வெடி நம்ம தான் வெடிக்கனும்னு வெடிய எடுத்து தெருவுல வச்சு அதன் திரியில நெருப்ப பத்த வச்சு நெஞ்சு பட படன்னு காத்திருக்க, அந்த பாழாய்ப்போன பட்டாசு வெடிக்காம சதி செய்யும் போது வரும் பாருங்க கோவம்............சே ஏன்டா இந்த வெடிய நம்பி வாங்கனோம்னு தோணும் போது ஒரு ஞானம் உதயமாகும்.

இனி மேல இந்த பிராண்ட் வெடிய வாங்கவே கூடாதுன்னு. (ஆனா அடுத்த வருஷம் மறந்துடும்)
இதெல்லாம் இப்ப நெனச்சா கூட சிரிப்பா இருக்கு போங்க.


பின்குறிப்பு : தீபாவளி வெடிக்கும் மேல உள்ள படத்துக்கும் நீங்களா கற்பனை பண்ணிக்கிட்டீங்கன்னா அதுக்கு நான் பொறுப்பில்லீங்க)

2 Comments:

At 7:57 AM, Blogger துளசி கோபால் said...

விஜயன்,

நல்லா எழுதியிருக்கீங்க.
அப்படியே இங்கேயும் பாருங்க. எல்லாம் ஒரு விளம்பரம்தான்:-)))
படிங்களேன்

 
At 2:24 AM, Blogger விஜயன் said...

Sorry Mr.Thulasi Gopal. I am not able to type in Tamil presently.

Thanks for reading and let reading.

 

Post a Comment

<< Home