பிரதமர் ஏன் ஓட்டு போடவில்லை?

இந்தக் கேள்வியைக் கேட்க ஜனநாயக இந்தியாவின் ஒரு அடிப்படை குடிமகன் என்ற முறையில் எனக்கு உரிமை உண்டு.
அஸ்ஸாம் மாநிலத்தில் திஸ்பூர் தொகுதியில் நடந்த வாக்குப் பதிவில் பிரதமர் மன்மோகன்சிங், வாக்குச் சீட்டில் தன் பெயர் இருந்தும் வாக்களிக்கவில்லை என்று செய்தி வெளியிட்டிருக்கிறது தினமணி
இந்த செய்தியினை அடிப்படையாகக் கொண்டு பார்த்தால் பிரதமர் தன் அடிப்படை ஜனநாயகக் கடமையாற்றத் தவறிவிட்டார் என்றே கூறலாம்.
இந்த செயலை நியாயப்படுத்தக் கூறப்படும் காரணங்கள் ஏற்புடையதாக இல்லை.
ஒவ்வொரு தேர்தலிலும் வாக்குச் சதவிகிதம் குறைவதற்கு இதுவும் ஒரு காரணம். நமக்கு ஒரு நாள் விடுமுறை கிடைத்தால் போதும். நாம் ஓட்டுப் போடவில்லை என்றால் நமக்கு என்ன நஷ்டம் யார் கேட்கப் போகிறார்கள் (இன்னும் பல காரணங்கள் உண்டு). பிரதமரே ஓட்டுப் போடவில்லை என்று நம்மில் சில பேர் நினைக்க பிரதமரே உதாரணமாக இருக்கலாமா?
வெளிநாட்டில் வாழும் என்னைப் போன்றவர்களுக்கு வாக்களிக்க முடியவில்லை என்ற ஏக்கமும் வருத்தமும் ஒருபுறம் இருந்தாலும், வாக்களிக்கும் தகுதியில் உள்ளவர்கள் வாக்களிக்கவில்லை என்றால் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை.
அய்யா பிரதமர் அவர்களே,
நல்லுதாரணமாய் இருக்க வேண்டிய நீங்களே இப்படி செய்யலாமா?.
தங்கள் மீது மிகுந்த மதிப்பும், மரியாதையும், நம்பிக்கையும் வைத்திருக்கும் ஒரு குடிமகனின் கேள்வி இது
படம் உதவி தினமலர்
2 Comments:
if he had utilised postal ballot option also then surely it is condemnable...
i strongly support this post
Thank you Muthu for your opinion
Post a Comment
<< Home